தினம் இரு திருக்குறள்-10(பெரியாரைத் துணைக்கோடல்)
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்(45)
(நன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையோரை துணைக் கொள்ளுதல்)
குறள்: 3
அரியவற்றுள் எல்லாம் அரிதே ,பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
பொருள்:
- பெரியோரைப் போற்றி அவரை தமது உறவாக்கிக் கொள்ளுதல்
- அரியவற்றுள் எல்லாம் அரிய செயலாகும்
அருஞ்சொற்பொருள்:
- பேணி-போற்றி
- தமர்-உறவினர்
குறள்: 4
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை
பொருள்:
- தம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்த பெரியவரே தமது உறவாக ஏற்றுக்கொள்வது
- எல்லாவற்றையும் விட சிறந்த வலிமை ஆகும்
- வன்மை -வலிமை
- தலை -சிறப்பு
- ஒழுகுதல்- ஏற்று நடத்தல்
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது