தினம் இரு திருக்குறள் -6
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: வினைத்திட்பம் (67)
குறள்: 5
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் - வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்
பொருள்:
- தனது செயலால் பெருமை பெற்று உயர்ந்த வரின் திறமை
- நாட்டை ஆளும் மன்னரிடத்தே எட்டி நன்கு மதிக்கப்படும்
அருஞ்சொற்பொருள்:
- வீறு-சிறப்பு
- எய்தி- பெற்று
- மாண்டார்-மாட்சிமைப்பட்ட அமைச்சர்
- உள்ளப் படும் - நன்கு மதிக்கப்படும்
- ஊறு எய்தி - நல்ல வினையை எய்துவித்தல்
குறள்: 6
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
பொருள்:
- ஒரு பொருளை அடைய எண்ணியவர் அதற்குரிய செயல் தகுதி உடையவராக இருந்தால் அந்தப் பொருளை எண்ணியபடியே அடைவர்
அருஞ்சொற்பொருள்:
- எய்துப-அடைவர்
- திண்ணியர் -வலியர்
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது