தினம் இரு திருக்குறள்-9(பெரியாரைத் துணைக்கோடல்)
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்(45)
(நன்னெறியில் செலுத்தும் பேரறிவு உடையோரை துணைக் கொள்ளுதல்)
குறள்: 1
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல்
பொருள்:
- அற நெறியை அறிந்து அறிவில் தெளிந்து முதிர்ச்சி உடையோரது நட்பினை
- ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்
அருஞ்சொற்பொருள்:
- மூத்த -முதிர்ந்த
- கேண்மை-நட்பு
- தேர்ந்து-ஆராய்ந்து
குறள்: 2
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார் பேணிக் கொளல்
பொருள்:
- தமக்கு வந்த துன்பத்தை நீக்குபவராகவும்
- மேலும் துன்பம் வராதபடி முன்னறிந்து காப்பவராகவும்
- மேற்கண்ட தன்மை உடையவர்களை பேணி துணையாக்கிக் கொள்ள வேண்டும்
- நோய்-துன்பம்
- உறாஅமை-துன்பம் வராமல்
- பெற்றியார்-பெருமை உடையவர்
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது