தினம் இரு திருக்குறள்-8
பால்: பொருட்பால்
இயல்: அமைச்சியல்
அதிகாரம்: வினைத்திட்பம் (67)
குறள்: 9
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை
பொருள்:
- முடிவில் இன்பம் தரத்தக்க ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் மிகுதியாக வருமாயினும்
- அத்துன்பம் நோக்கி உள்ளம் தளராது துணிவு மேற்கொண்டு செய்து முடித்தல் வேண்டும்.
அருஞ்சொற்பொருள்:
- உறவரினும்-மிகுதியாக வருமாயினும்
- துணிவாற்றி-துணிவை நெறியாகக் கொண்டு
குறள்: 10
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் - வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு
பொருள்:
- செய்யும் செயலில் உறுதி கொள்ளாதவரை அவரிடத்தில் எந்த வகையான திறமைகள் இருந்தாலும் உலகத்தார் மதிக்க மாட்டார்.
அருஞ்சொற்பொருள்:
- வேண்டாரை-இல்லாதவரை
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது