தினம் இரு திருக்குறள்-24(வலியறிதல்)

 

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்

அதிகாரம்: வலியறிதல்
( பகை வெல்லுதலில் வலிமையை அறிந்து கொள்ளுதல்)
குறள்: 1

 வினைவலியும் தன்வலியும் மாற்றான்                                                                        -வலியுந்
 துணைவலியுந் தூக்கிச் செயல் 

பொருள்:
  •  தான் செய்யக் கருதிய செயலின் வலிமை, 
  • தன்னுடைய வலிமை, பகைவருடைய வலிமை, மற்றும் இரு சாராருக்கும் துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தே அச்செயலில் ஈடுபட வேண்டும்.
அருஞ்சொற்பொருள்
  • தூக்கி - சீர்தூக்கி 
குறள்: 2
 ஒல்வ தறிவது அறிந்ததன்                                                                                      - கண்தங்கிச்
 செல்வார்க்குச் செல்லாதது இல் 

பொருள்:
  •    நம்மால் செய்ய முடியும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதை அறிந்தும், 
  • -அச்செயல் மீது மனதை ஊன்றி செயல்பட்டால் முடியாத செயல் ஏதுமில்லை.
அருஞ்சொற்பொருள்
  • ஒல்வது - தம்மால் இயன்றது

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE