தினம் இரு திருக்குறள்-25(வலியறிதல்)
பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: வலியறிதல்
( பகை வெல்லுதலில் வலிமையை அறிந்து கொள்ளுதல்)
குறள்: 3 உடைத்தம் வலியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
பொருள்:
- தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் மன எழுச்சியால் செயலை தொடங்கி,
- முடிக்க இயலாமல் இடையிலேயே கெட்டுப் போனவர்கள் பலர் ..
அருஞ்சொற்பொருள்
குறள்: 4
அமைந்தாங் கொழுகான் அளவறியான் -தன்னை
- உடைத்தம்- தம்முடைய
- முரிந்தார் -அழிந்தவர் (தோற்றவர்)
அமைந்தாங் கொழுகான் அளவறியான் -தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
பொருள்:
- மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல்,
- - தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
அருஞ்சொற்பொருள்
- . தன்னை வியந்தான்- தன்னைத்தானே உயர்வாக எண்ணுபவன்.
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது