செய்தி துளிகள்-135
வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் ஹலோ டாக்டர் என்ற புதிய செயல் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த திட்டத்தின் மூலமாக நோயாளிகள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வகையில், முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சை நெறிமுறைகளோடு மெய் நிகர் ( virtual consultation ) முறையில் மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவது, வயது முதிர்ந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கவும், தீவிர நோயாளிகளுக்கு வீடு தேடி வந்து மருத்துவர் மற்றும் செவிலியர் அடங்கிய குழுவால் பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கவும் இந்த திட்டம் உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது