தினம் இரு திருக்குறள்-44(கூடாநட்பு)

 

பால்: பொருட்பால்

இயல்: அங்கவியல்

அதிகாரம்:83. கூடாநட்பு

குறள்:1

  சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை

 நேரா நிரந்தவர் நட்பு

பொருள்:
  •  மனதார இல்லாமல் வெளியில் நண்பர் போல் கூடி நடப்பவரது நட்பானது,
  • தருணம் வாய்க்கும் போது ஓங்கி அடிப்பதற்கு உதவும் பட்டறைக் கல்லிற்குஒப்பானதாகும்.
அருஞ்சொற்பொருள்
  • நேரா - கூடாமல்
  • சீரிடம் -வாய்த்த இடம்
  • நிரந்தவர் - கூடியவர்
 அணி 

          எடுத்துக்காட்டு உவமையணி

குறள்: 2

  இனம்போன்று இனமல்லார் கேண்மை                                                                         -மகளிர்
 மனம்போல வேறு படும் 


பொருள்:
  •  உற்றாராக இல்லாமல் உற்றார் போல நடிப்பவரது நட்பானது,
  • விலைமாதரின் காதல் போல உள்ளொன்றும் புறமொன்றுமாக வேறுபடும்.

அருஞ்சொற்பொருள்
  • இனம்- உற்றார்
  • கேண்மை - நட்பு
 அணி 
          உவமை அணி


Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE