தினம் இரு திருக்குறள்-46(கூடா நட்பு)

 

பால்: பொருட்பால்

இயல்: அங்கவியல்

அதிகாரம்:83. கூடாநட்பு

குறள்:5

  மனத்தின் அமையா தவரை                                                                         -எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற் றன்று

பொருள்:
  •  மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்த ஒரு முடிவும் எடுக்க கூடாது.
அருஞ்சொற்பொருள்
  • தேறல் - தெளிதல்
குறள்: 6

நட்டார்போல் நல்லவை சொல்லினும்.                                                              -  ஒட்டார்சொல் 
ஒல்லை உணரப் படும்

பொருள்:
  •  பகைவர், நண்பர் போல நல்ல வார்த்தைகளை சொன்னாலும்,
  • அந்த சொற்களின் தீமை விரைவில் வெளிப்பட்டே தீரும். 
அருஞ்சொற்பொருள்
  • நட்டார்- நண்பர்
  • ஒட்டார் - பகைவர்
  • ஒல்லை - விரைவில்

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE