தினம் இரு திருக்குறள்-47(கூடா நட்பு)
பால்: பொருட்பால்
இயல்: அங்கவியல்
அதிகாரம்:83. கூடாநட்பு
குறள்:7
சொல்வணக்கம் ஒன்னார்கண் -கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
பொருள்:
- வில்லின் வளைவானது தீமை செய்வதையே குறிக்கும்
- அதுபோல பகைவர் வணங்கி பேசுவதும் தீயவையே குறிக்கும் என்பதால் ஏற்றுக் கொள்ள வேண்டாம்.
அருஞ்சொற்பொருள்
குறள்: 8
- ஒன்னார் -பகைவர்
- கொள்ளற்க- ஏற்க வேண்டாம்
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் -ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
பொருள்:
- பகைவர் தொழுவதற்காக குவித்த கைகளுக்கும் கொலைக்கருவி மறைந்திருக்கும்.
- பகைவரின் அழுத கண்ணீரும் அத்தன்மை உடையதே.
அருஞ்சொற்பொருள்
- படையொடுங்கும்- கொலைக்கருவி மறைந்திருக்கும்
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது