தினம் இரு திருக்குறள்-48(கூடா நட்பு)

 

பால்: பொருட்பால்

இயல்: அங்கவியல்

அதிகாரம்:83. கூடாநட்பு

குறள்:9

மிகச்செய்து தம்மெள்ளு வாரை                                                                               - நகச்செய்து 

நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

பொருள்:
  •  புறத்தே மிகுதியாக நட்புக்காட்டி அகத்தே இகழும் பகைவரை,
  • நாமும் புறத்தே மகிழ்வித்து மனத்திலே அவர் நட்பை ஒழித்தல் வேண்டும்.
அருஞ்சொற்பொருள்
  • எள்ளுதல் - இகழ்தல்
குறள்: 10
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 

அகநட்பு ஓரிஇ விடல்

பொருள்:
  •  பகைவர் நண்பர் ஆகும் காலம் வரும்போது, 
  • மனத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்பு பாராட்டி பின்னர் அந்நட்பையும் விட்டுவிட வேண்டும். 
அருஞ்சொற்பொருள்
  • விடல் - விட்டு விடுதல்

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE