இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பை (MTS) துறை


 புலம்பெயர்ந்த கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பற்றிய மேம்படுத்தப்பட்ட தகவல்களை ஒரே அமைப்பில் உடனடியாக வழங்கும் நாட்டின் முதல் 'இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு' இன்று மும்பையில் திறக்கப்பட்டது.


  மகாராஷ்டிரா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மங்கள்பிரபாத் லோதா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பைத் தொடங்கி வைத்தார்.

 

 தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு. லோதா, பாதிக்கப்படக்கூடிய பருவகால புலம்பெயர்ந்த பயனாளிகளின் நடமாட்டத்தை தனிப்பட்ட தனித்துவ அடையாள எண்கள் மூலம் கண்காணிக்க இணையதள அடிப்படையிலான இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பை (MTS) துறை உருவாக்கியுள்ளது என்றார்.


 இந்த முறையால் பருவகால புலம்பெயர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் தகவல்கள் உடனடியாக கிடைக்கும் என்றார். இதன்மூலம் அரசுத் திட்டங்களின் பயன்களை பயனாளிகள் எளிதாகப் பெற முடியும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.

 இந்த அமைப்பு https://mahamts.in/login என்ற இணையதளத்திலும், மஹாஎம்டிஎஸ் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE