#Group2Mains_2023 ♻️ முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் ♻️
சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், இயற்கையைப் பாதுகாக்கும் விதமாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் புதிய பசுமைத் திட்டங்களைக் கண்டறிவதற்கும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும், ✅ முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் ✅ தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் படி சுற்றுச்சூழல் நலனில் அக்கறை கொண்ட தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து அம்மாவட்டத்தின் பசுமை கனவுகளை நிறைவேற்ற உதவிகரமாக இருப்பார்கள்.
Source : தினமணி 04/09/2021
.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது