நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைவராக பிவிஆர் சுப்பிரமணியம் நியமனம்
நிதி ஆயோக்கின் புதிய தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த பரமேஸ்வரன் ஐயர் உலக வங்கியின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
புதிய தலைவர்:
கடந்த 2022 ஆம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பரமேஸ்வரன் ஐயர் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது உலக வங்கியின் தலைமையகத்தில் நிர்வாக இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதனால் நிதி ஆயோக்கின் புதிய தலைவரை தேர்வு செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது