Posts

Showing posts from 2022

TNPSC GROUP IV RESUT DATE CHANGED

Image
 

TRB ANNUAL PLANNER RELEASED

Image
 

#Group2Mains_2023 💠 மக்கள் ஐடி 💠

Image
  ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ‘மக்கள் ஐடி’ என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் சார்ந்த அனைத்து தரவுகளையும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. பொது விநியோக துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பொது மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் பல்வேறு துறைகள் தனித் தனியாக தரவுகளை சேமித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் தரவுகளைக் கொண்டு ஒருங்கிணைப்பு மாநில குடும்பத் தரவு தளத்தை தயார் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பணியை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை செய்யவுள்ளது. இதில் அனைத்து துறைகளின் தரவுகளையும் ஒருங்கிணைந்து இந்தத் தரவு தளம் உருவாக்கப்படவுள்ளது. இதன்படி பொது விநியோகம், முதல்வர் காப்பீட்டு திட்டம், வருவாய், கல்வி, முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம், கருவூலம், சுகாதாரம் பல்வேறு துறைகளிடம் உ...

#Group2Mains_2023 ✅ இஸ்ரோ எதிர்கால திட்டங்கள் ✅

Image
இஸ்ரோ தொடக்கம் - ஆகஸ்டு15, 1969 இஸ்ரோ தலைவர் - S. சோம்நாத்  இஸ்ரோ உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி, ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி  உட்பட 21 இடங்களில் இஸ்ரோ மையங்கள் உள்ளது.  இந்திய விண்வெளி ஆய்வுகளின் தந்தை என்றழைக்கப்படும் ‘விக்ரம் சாராபாய்' மற்றும் ’ஹோமி ஜஹாங்கீர் பாபா' இருவரின் தலைமையில் ஆய்வு மையங்கள் தொடங்கப்பட்டு, விண்வெளி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  நம் நாட்டுக்கு தேவையான தகவல்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், அறிவியல் ஆராய்ச்சியில் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட பல்வேறு தொடர்சாதனைகளையும் செய்துவருகிறது.  🛰️ ஆதித்யா - L1 (Aditya-L1)  🛰️ ஆதித்யா-L1 சூரியன் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வடிவமைக்கப்படும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வுக்கலம். 400 கிலோ கிராம் செயற்கை கோள் சூரியனின் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய   SUIT (Solar...

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு: கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு.

Image
  சென்னை: குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. 7301 காலிப்பணியிடங்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜீலை 24ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.  குரூப் 4 தேர்வைத் தமிழ்நாடு முழுவதும் 18.5 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 7,301 பணியிடங்கள் அறிவித்த நிலையில் தற்போது 9,870 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி குறித்து ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளன. தேர்வர்கள் மகிழ்ச்சி: பணியிடங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதிகப்படியான தேர்வர்களுக்கு அரசுப் பணிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதனால் கடந்த ஜீலை 24ம் தேதி தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

#Group2Mains_2023 01) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் 02) பேராசிரியர் அன்பழகன் சிறந்த பள்ளி விருது 03) பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்

Image
  🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 01)  பேராசிரியர்‌ அன்பழகனின்‌ நூற்றாண்டு நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயல்படும்‌ டி.பி.ஐ. வளாகத்தில்‌ பேராசிரியர்‌ அன்பழகனின்‌ திருவுருவ சிலை  அமைக்கப்பட்டுள்ளது.. அத்துடன் பேராசிரியர்‌ அன்பழகன்‌ நூற்றாண்டு வளைவையும்  திறந்து வைத்து  டிபிஐ வளாகத்துக்கு ✅ பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம் ✅  என முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார்.  02) கற்றல்‌ கற்பித்தல்‌, ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாடு, தலைமைத்துவம்‌, மாணவர்‌ வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும்‌ சிறந்த அரசு  பள்ளிகளுக்குப்‌ பேராசிரியர்‌ அன்பழகன் பெயரில்‌ விருது வழங்கப்படுகிறது.  03) அனைத்து அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பழங்குடி நலப் பள்ளிகள், சீர்மரபினர் பள்ளிகள் ஆகியவற்றை மேம்படுத்த ✅ பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் ✅  அமல்படுத்தப்படுகிறது. அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் அறையுடன்கூட வளர்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் இத்...

Group2Mains_2023 🧒 நற்கருணை வீரன் 🧒

Image
 # சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து அனுமதித்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.

#Group2Mains_2023 🚑 இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் 🚑

Image
  தொடக்கம் :- 18.12.2021  தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்திடும் நோக்கில் தமிழக அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம். இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் ⛑️ இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 ⛑️ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் முதலம...

#Group2Mains_2023 💠 ஊட்டச்சத்தை உறுதி செய் / ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம் 💠

Image
  தொடக்கம் : 21/05/22 , தொட்டபெட்டா ஊராட்சி, ஊட்டி  ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், 6 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை செய்யும் ♌️ ஊட்டச்சத்தை உறுதி செய்  திட்டம் ♌️  தொடங்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கு மருத்துவ உதவியும், சிறப்பு ஊட்டச்சத்து உணவும் வழங்கப்படும்.  ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து நடத்தும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எடை, உயரம் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் சேகரிக்கப்பட்டு பிரத்தியேக செயலியில் பதிவு செய்யப்படும். இதன் அடிப்படையில் குழந்தைகள் சீரான இடைவெளியில் கண்காணிக்கப்பட்டு தேவையான ஊட்டச்சத்து வழங்கப்படும்.  இதன் பின்னர், தமிழகத்தில் ஒன்று முதல் இரண்டு வயது குழந்தைகள், அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதால் அங்கன்வாடி மையங்களில் இரண்டு வயது வரையான குழந்தைகளுக்கு, திங்கள், புதன், வியாழன் என, வார...

PC RESULTS PUBLISHED

Image
  Click here to download the result Click here to download the result

#Group2Mains_2023 🎀 தமிழ்நெட் திட்டம் 🎀

Image
  கிராமப்புற பகுதிகளில் செயல்படுத்தப்படும் பாரத்நெட்  திட்டம் போன்று  மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் இணைய வசதிகள்  சென்றடைய ஆப்டிகல் பைபர் மூலம் இணைத்து, டிஜிட்டல் புரட்சியின் பயன்களை தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் பயன்பெறும் வகையிலும், அவரவர் இல்லங்களுக்கு அருகில் தமிழ்நாடு அரசின் பல்வேறு சேவைகளை இணையம் மூலம் பெறவும், நகர்ப்புற பகுதிகளிலும் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் ◆ தமிழ்நெட் ◆  என்று அழைக்கப்படும்.  இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் போன்ற நிறுவனங்களிடமிருந்தும், பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியிலும் செயல்படுத்தப்படும்.   Source : தினபூமி நாளிதழ் 14/07/2017

#Group2Mains_2023 📢 TN Talk 📢

Image
  தொடக்கம் -- 2022  தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இலக்கியம், பொருளாதாரம், கல்வி, தொல்லியம், மருத்துவம் அறிவியல் போன்ற பல துறைகளின் மிகச் சிறந்த ஆளுமைகளை கொண்டு  🎤 TN Talk 🎤  என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசின் பொது நூலகத்துறை முடிவு செய்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலக ஒருங்கிணைப்பில் நவீன அரங்க அமைப்புடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஆண்டுக்கு 25 நிகழ்ச்சிகள் நடைபெறும். புகழ் பெற்ற கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் இந்த நிகழ்வு நடைபெறும். நிகழ்வுக்கான அமைவிடங்கள் நிகழ்வின் தன்மைக்கு ஏற்ற வகையில் இருக்கும் இதற்கான அட்டைவணை முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு சமூக வலைதளம் வாயிலாக பகிரப்படும்.  நிகழ்வுகள் அனைத்தும் இணையம் வழியாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.  முறையாக எடிட் செய்யப்பட்டு யூடியூப்பில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள பொது நூலகத்துறை இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.  Source :  தி இந்து ...

#Group2Mains_2023 💐 முதல்வரின் புத்தாய்வு திட்டம் 💐

Image
  திறமையான இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம் என்ற புதியதிட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.  சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  தமிழக இளைஞர்களின் திறமைகளில் அரசு அதிக நம்பிக்கைகொண்டுள்ளது. எனவே, இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்த, புத்தாய்வு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தொழில்முறை, கல்விப் பின்னணி அடிப்படையில் தகுதியான இளம் வல்லுநர்களை தேர்வு செய்து ஊக்க ஊதியத்துடன் 2 ஆண்டு புத்தாய்வு பயிற்சி அளிக்கப்படும்.  இவர்கள் மாநில அரசின் முதன்மை மற்றும் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், முதல்வர் அலுவலகம், சம்பந்தப்பட்ட துறைகளின் வழிகாட்டுதலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வார்கள். திட்டங்களை கண்காணித்து செயல்பாட்டில் பிரச்சினை இருந்தால் அவற்றை களையவும், சிறப்பாக செயல்படுத்தவும் தேவையான முடிவுகளை எடுக்கவும் உதவியாக இருப்பார்கள். இத்திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழ...

#Group2Mains_2023 ♻️ முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் ♻️

Image
சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் இளைய தலைமுறை மற்றும் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், இயற்கையைப் பாதுகாக்கும் விதமாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்துடன் புதிய பசுமைத் திட்டங்களைக் கண்டறிவதற்கும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும், ✅ முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் ✅ தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் படி சுற்றுச்சூழல் நலனில் அக்கறை கொண்ட தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து அம்மாவட்டத்தின் பசுமை கனவுகளை நிறைவேற்ற உதவிகரமாக இருப்பார்கள்.  Source : தினமணி 04/09/2021 .

#Group2Mains_2023 🎋 நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் 🎋

Image
தொடக்கம் - 2021  தமிழகத்தில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து, வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் , தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் 2021 - 22 ல் மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் மரபுசார் நெல் ரகங்களைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.  தமிழில் ‘பள்ளு’ இலக்கியங்கள் உழவர்களின் வாழ்க்கை முறையை நாடகப் போக்கில் கூறுபவை. ‘முக்கூடற்பள்ளு’வில் முத்துச்சம்பா, பூஞ்சாலி, பூம்பாளை, வெள்ளச் சம்பா, மறுவள்ளிச் சம்பா, நீலச் சம்பா, வில்லூன்றிச் சம்பா, கடுக்கன் சம்பா, கதலிவாழை, சித்திரக்காலி, மணல்வாரி, செஞ் சம்பா, சீரக சம்பா என ஏராளமான நெல்லின் பெயர்கள் காணப்படுகின்றன. அதன்படி அறுவதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, சிவப்பு கவுனி, சிவன் சம்பா, தங்க சம்பா, தூயமல்லி, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை என்பதால் இத்தகைய மரபுசார் நெல் இரகங்களைத் திரட்டி, பலமடங்காக ப...

#Group2Mains_2023 ☯️ சிறுதானிய ஆண்டு ☯️ சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் ☯️ சிறுதானிய திருவிழா ☯️ துவரை சாகுபடி சிறப்பு மண்டலம்

Image
அளவில் சிறுத்து, ஊட்டத்தில் பெருத்து, உடலை உறுதியாக்குபவை சிறுதானியங்கள். அவற்றை வழி மொழியும் வகையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, 🎄 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக  🎄 அறிவித்துள்ளது.  தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு 🔖 சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் 🔖  திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும்,   தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.  சிறுதானிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விவசாயிகள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், நுகர்வோர் பங்கேற்கும் 🎀 சிறுதானிய திருவிழா 🎀  மாநில, மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.  பயறுவகை உற்பத்தியில் தன்னிறைவை அடையும் பொருட்டு, துவரை உற்பத்தியை அதி...

#Group2Mains_2023 ❇️ மனநல நல் ஆதரவு மன்றங்கள் ❇️

Image
🥀 மனம் 🥀 🌺  நட்புடன் உங்களோடு -  மனம் உதவி எண் 14416  🌺  தொடக்கம் : - 22/12/2022 பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் தற்கொலையில் தமிழ்நாடு 2ஆவது இடத்தில் இருக்கிறது.  மருத்துவத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் தற்பொழுது தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவம் படிக்கும் மாணவர்களும் தற்கொலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களின் தற்கொலையைத் தடுப்பதற்கு புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளத.  மனம் என்னும் புதிய திட்டத்தின் மூலம் மனநல ஆதரவு மன்றம் தமிழ்நாடு அரசின் முன்முயற்சியின் தொடக்க கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டு  உள்ளது. மனநலம் குறித்த வழக்கமான விழிப்புணர்வை உருவாக்குதல், பயிற்சித்திட்டத்தின் மூலம் மாணவர்களின் மன நலத்தை உறுதி செய்யவுள்ளது. மேலும் உளவியல் சிக்கல்கள் தொடர்பான குறிப்புகள் மற்றும் அறிகுறிகளை அடையாள...

#Group2Mains_2023 👩‍⚕️ மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 👩‍⚕️

Image
  தொடக்கம் -- 05.08.2021, சாமனப்பள்ளி கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம்.  தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விதமாக “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் வடிவமைக்கப்பட்டு, களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.  இவற்றுள் 45 வயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன்முறை மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கு பரிந்துரைத்தல், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல், பெண்களை கருப்பைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிவதற்காக ஆய்வுக்கு பரிந்துரைத்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் வழங்கி கண்காணிக்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இன்று கிராமப் பகுதிகள் தொடங்க...

#Group2Mains_2023 🐯 வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் 🐈🐃🐂 🐕🦃🐑🐏🐓🐔

Image
  தொடக்கம் - 2022  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு 🐄  வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்  🐄 என்னும் புதிய திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது.  ஆதரவற்ற, கைவிடப்பட்ட மாடுகள், ஆடுகள் மற்றும் செல்லப் பிராணிகள் அனைத்தும் இந்த திட்டத்தின் மூலம் பராமரிக்கப்படும்.  இந்த வள்ளலார் காப்பக திட்டத்தால், சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வழிவகுக்கும்.

Group2Mains_2023 👩‍🎓 புதுமைப்பெண் திட்டம் / மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம். 👩‍🎓

Image
  தொடக்கம் -- 05/09/2022  தமிழ்நாட்டின் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில்   முதல்வராக இருந்த கருணாநிதி, கடந்த 1989ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தை கொண்டு வந்தார்.  அதன்படி, மணப்பெண்ணின் கல்வித்தகுதியை அடிப்படையாக கொண்டு 10 ஆயிரம் ரூபாய் நிதியில் தொடங்கி படிப்படியாக உயர்ந்து  25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி என  வழங்கப்பட்டது.  கடந்த 2011 ஆம்  ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 25 ஆயிரம், 50 ஆயிரம் நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. இதன்படி 4 கிராம், எட்டு கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.  பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல...

#Group2Mains_2023 👫 தகைசால் பள்ளிகள் (Schools of Excellence) 👫

Image
  தொடக்கம் : 05/09/2022  திட்டத்தை தொடங்கி வைத்தவர் : டெல்லி முதல்வர் மாண்புமிகு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள்.  தகைசால் பள்ளிகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், கல்வி் சாரா செயல்பாடுகளான விளையாட்டு, கலை, இலக்கியம் என்று அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும். இதனால் அனைத்து வகையான திறமைகளுடன் அரசு பள்ளி மாணவ, மாணவியர் கல்வி கற்கும் சூழல் உருவாகும். அதற்கு வகுப்பறையில் நேரடியாக பாடங்கள் சொல்லித் தருவது மட்டுமல்லாமல் இணையவழியிலும் காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்படும்.  தகைசால் பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6 கோடியே 5 லட்சத்து 8 ஆயிரத்து 430 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகைசால் பள்ளிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன்கூடிய கணினிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படவுள்ளன. தகைசால் பள்ளிகளில் பாடம் நடத்தப் போகும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிஅளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம...

#Group2Mains_2023 🔹 சிற்பி திட்டம் 🔹

Image
தொடக்கம் -- 14/09/2022  சிற்பி என்பதற்கு Students in Responsible Police Initiatives (SIRPI) என்பதுதான் பொருள்.  பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‘சிற்பி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு புதிய சீருடை மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  சிறார் குற்றங்களை தடுக்கவும், போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களை தவிர்க்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள 100 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த தலா 50 மாணவர்கள் பங்கேற்கும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது.  சிறுவர்களை இளமைக்காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்பு உள்ளவர்களாகவும் ஆக்க இந்த திட்டம் பயன்படும்.  குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவையே சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபட காரணமாக உள்ளன. இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன்...

#Group2Mains_2023 ♻️ ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தின் சாதக பாதகங்கள். ♻️

Image
தொடக்கம் - 17/10/2022  எந்த நிறுவனத்தின் உரத்தை வாங்குவது என்பது தொடர்பாக விவசாயிகளிடம் குழப்பம் இருந்தது. பிரபல நிறுவனங்களின் உரத்தை அதிக விலைக்கு வாங்கினர். இதனால், சாகுபடிச் செலவு அதிகரித்தது. இதைக் கருத்தில் கொண்டு `ஒரே நாடு, ஒரே உரம்' திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலையில், தரமான உரம் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும்.  இந்தியா முழுவதும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் என்பிகே போன்ற எல்லா உரநிறுவனங்கள்ளும், 'பாரத்' என்ற பொது பெயரில்தான் உரத்தை விற்க வேண்டும். பாரத் யூரியா, பாரத் டிஏபி, பாரத் எம்ஓபி மற்றும் பாரத் என்பிகே போன்ற பெயர்களில்தான் இனி உரம் விற்கப்படும். மேலும், உர மானியத் திட்டத்தை குறிக்கும் ,முத்திரை, பிரதான்மந்திர பாரதிய ஜானுர்வரக் பரியோஜனா என்ற முத்திரைதான் உர மூட்டைகளில் பயன்படுத்தப்படவேண்டும்.  இந்தத் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் தங்கள் பெயர், பிராண்ட், முத்திரை மற்றும் பிற தொடர்புடைய தயாரிப்புத் தகவல்களை தங்கள் பைகளில் மூன்றாவது பட்டியில் மட்டுமே காட்ட அனுமதிக்கப்படுகிறது.  பிரதமர் கிசான் சம்ரிதி கேந்திரா' என்ற பெய...

#Group2Mains_2023 ♻️ மின்னணு வேளாண்மை திட்டம் (Digital Agriculture) ♻️

Image
 தொடக்கம் : 2022 🔰 விதை முதல் விளைச்சல் வரை அனைத்துத் தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் உழவன் செயலி மூலம் பெறலாம். விளைநிலங்கள் வாரியாக விதைப்பு முதல் விற்பனை வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவித்து, அதிக வருமானம் பெற வழிவகை செய்யப்படும். ✅  விளைநிலங்கள் வாரியாக பயிர்த்திட்டம் தயாரிக்க அனைத்து கிராம புல எண்களுக்கும் புவியிடக்குறியீடு (Geo Tagging) வழங்கப்படும். தொடர்ந்து, உடைமைதாரர்களின் அடிப்படை விவரங்கள், மண்வளம், சாகுபடி விவரங்கள் இணைக்கப்படும். தமிழகத்தின் ஏழு வேளாண் மண்டலங்கள், 1330 குறு வேளாண் மண்டலங்களாக பகுக்கப்பட்டு, உற்பத்திக் காரணிகளின் அடிப்படையில் புதிய சாகுபடித்திட்டம் படிப்படியாக பரிந்துரைக்கப்படும். ☑️ தமிழ்நாடு மின்னணு ஆளுமை முகமை (TNeGA), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பூச்சி மற்றும் நோய்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (Artificial Intelligence) மூலம் கண்காணிக்கப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாக விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்படும். ✳️ தமிழ்நாடு வேளாண்மைப் பல்க...

ANNUAL PLANNER குறித்து TNPSC விளக்கம்

Image
 

_*ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - Iல் தேர்ச்சி பெற்றவர்கள் இன்று முதல் (22.12.2022) சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - TRB அறிவிப்பு!!!*

Image
 

சாகித்திய அகாதமி விருது

Image
 சாகித்ய அகாதெமி விருது 'காலா பாணி' நாவலுக்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு. ராஜேந்திரனுக்கு அறிவிகப்பட்டுள்ளது.

#Group2Mains_2023 மரகதப் பூஞ்சோலைகள் .

Image
 

#Group2Mains_2023 காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல சட்டம் 2020

Image
  சட்டம் அமுலான நாள் 22.02.2020  காவிரி டெல்டா பகுதிகளில் நடக்கும் விவசாயமல்லாத சில பணிகள், பிராந்தியத்தின் விவசாயத்தை கடுமையாக பாதித்து, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால், இந்தப் பிராந்தியத்தின் விவசாயத்தைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளைத் தடைசெய்வதற்காகவும் காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்கள்  வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன. இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல்...

#Group2Mains_2023 🐒 எம்பாக்ஸ் ( குரங்கு அம்மை ) 🐒 🐵 MPox ( Monkey Pox ) 🐵

Image
  பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது.  மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது.  தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்பாக்ஸ் (Mpox) என மாற்றியுள்ளது.  எம்பாக்ஸ் (Mpox) காய்ச்சலை  ஏற்படுத்தும் வைரஸ்,   Poxviridae குடும்பத்தில் உள்ள Orthopoxvirus இனத்தைச் சேர்ந்தது.  ஒட்டுண்ணிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் மூலம் பரவுகிறது. மனிதர்கள் மற்றும் குரங்குகள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.  இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோய் ஆகும்.  இந்தியாவில் முதன் முதலில் 1957ம் ஆண்டு கர்நாடகாவின் கியாசனூர் வனப்பகுதியில் பல குரங்குகள் இறந்தன.  🐵 எம்பாக்ஸ் (Mpox)  என்றால் என்ன? 1958-ம் ஆண்டு ஆய்வக நோக்கக்களுக்காக பயன்படுத்தப்பட்ட குரங்குகளில் இருந்து இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் குர...

#Group2Mains_2023 ✴️ புலம்பெயர் தமிழர் நல வாரியம் ✴️

Image
  உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள். வேலைகள் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள். தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள். இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன.  எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தமிழகம்தான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படிப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழக அரசு 2011 மார்ச் 1ம் நாள் வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் இயற்றியது.  இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு  புலம்பெயர் தமி...

Annual planner 2023 changedGroup 1 service added..

Image
 

புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியை நியமனம் செய்து முதலமைச்சர் உத்தரவு.

Image
 

#Group2Mains_2023. 01) குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 02) விண்வெளி தொழில் பூங்கா 03) விண்வெளி துறைமுகம்

Image
  01) குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 02) விண்வெளி தொழில் பூங்கா 03) விண்வெளி துறைமுகம்  ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து இஸ்ரோ நிறுவனம் ராக்கெட்டுகளை ஏவி வருகிறது.  விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலகநாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. பல நாடுகள் தொடர்ந்து செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோவை நாடி வருகின்றன. இதன் காரணமாக இஸ்ரோவுக்கு கூடுதல் ராக்கெட் ஏவுதளம் தேவைப்படுகிறது.  இந்தியாவிலேயே புவியியல் அடிப்படையில் பூமத்திய ரேகைக்கு அருகில் ஸ்ரீஹரிகோட்டா இருப்பதால்தான் தலைசிறந்த ஏவுதளமாக விளங்குகிறது. அதேபோல் பூமத்திய ரேகைக்கு இன்னும் மிக அருகில் குலசேகரப்பட்டணம் இருப்பதால், குறைந்த பொருட்செலவில் ராக்கெட்டுகளை அனுப்ப புவியியல் ரீதியாக குலசேகரப்பட்டினம் உகந்த பகுதியாக இருப்பதாக இஸ்ரோ கண்டறிந்துள்ளது.  ராக்கெட் ஏவுதளத்திற்கு ஏற்ற இடம் என்பது நிலநடுக்கோட்டுப் பகுதிதான். ஸ்ரீஹரிகோட்டா, நிலநடுக்க...

#Group2Mains_2023 ◆ பாரத்நெட் திட்டம்

Image
பாரத் நெட்  திட்டம் என்பது இந்தியாவில் இருக்கும் கிராம பஞ்சாயத்துகள் அனைத்துக்கும் இணைய வசதி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டமாகும்.  பாரத் நெட் - 1 திட்டம் 2011ல் தொடங்கப்பட்டது.  மருத்துவம், கல்வி மற்றும் இ-கவர்னன்ஸ் எனப்படும் மின் ஆளுகை ஆகியவைகளை நாடு முழுவதும் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.  இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில்  13 மாநிலங்களைச் சேர்ந்த 10,000 கிராமங்களில் இணைய வசதி கொடுக்கும் பணிகள் கடந்த 2017 டிசம்பரில் நிறைவு பெற்றது. பாரத் நெட் - 2 திட்டம்  ஆகஸ்ட் 15, 2020-ல் இருந்து 1,000 நாட்களில் நாடு முழுவதும் இருக்கும் 6 லட்சம் கிராமங்களில் இணைய வசதி கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், நாட்டின் 16 மாநிலங்களில் இருக்கும் கிராமங்களில் இணைய வசதி கொடுக்கப்பட இருக்கிறது. பாரத் நெட் -2 திட்டத்தில்  தமிழகத்தில் இருக்கும் 12,525 கிராமங்களுக்கு இண்டர்நெட் வசதி கொடுக்கப்பட இருக்கிறது.  தமிழகத்தின் கடலோர கிராமங்கள் தவிர மற...

Group2Mains_2023 ★ முதல்வரின் முகவரி ★

Image
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’, ‘முதலமைச்சரின் உதவி மையம்’, ‘முதலமைச்சரின் தனிப்பிரிவு’ மற்றும் ‘ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை’ அமைப்பு ஆகியவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, இனி அவை அனைத்தும் ஒரே துறையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறைக்கு, ‘முதல்வரின் முகவரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.